Wednesday, March 08, 2006

நகைச்சுவை நேரம்.. ??!!

ஆச்சர்யமாக இருக்கிறது, பக்தியின் சக்தி :)

தினத் தந்தியின் செய்தி : http://dailythanthi.com/article.asp?NewsID=243711&disdate=3/8/2006

பூமிக்குள் இருந்து சிலை தோன்றியதாக பரபரப்பு
ராயபுரம், மார்ச்.8-


கொருக்குப்பேட்டை அம்மன் கோவிலில் பூமிக்குள் இருந்து சிலை தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த கோவிலுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.
அம்மன் கோவில்
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் முதல் தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது மனைவி கிரிஜாவும் இந்த கோவிலை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டி பூஜை செய்து வருகிறார்கள்.
நேற்று பகல் 12 மணி அளவில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கிரிஜா கோவிலை திறந்தார். அப்போது தரையில் அம்மன் வடிவில் புதிதாக ஒரு மண் சிலை கிடந்ததை கண்டார். பூட்டி இருந்த கோவிலுக்குள் எப்படி அம்மன் சிலை வந்தது என்று தெரியாமல் அவர் திகைத்தார். பூமிக்குள் இருந்து அந்த சிலை தோன்றி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
பொதுமக்கள் குவிந்தனர்
இதுபற்றி கிரிஜா அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் பக்தி பரவசம் பொங்க கூறினார். இந்த செய்தி அந்தப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. கோவில் முன்பு ஆண்களும், பெண்களும் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அந்த அம்மன் சிலையைப் பார்த்து வணங்கினார்கள்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

==============================

இந்த செய்தியைக் கேட்டு நிச்சயமாக அந்த சிலையைக் கோவிலினுள் தெரியாமல் விசிய சிறுவன் அதே ஊரில் ஏதேனும் ஒரு மூலையில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பான் :)

சுகா

2 comments:

வெளிகண்ட நாதர் said...

ஏன் புள்ளையா கண்லருந்து பால் வருதுன்னு சொல்லலியா?

Suka said...

எங்க ஊர் ப்ளேக் மாரியம்மன் கோவில் பிள்ளையார் பால் குடித்ததாகத் தானே கூறினார்கள் .. அன்று சிங்காநல்லூர் திருச்சி சாலையில் ட்ராஃபிக் ஜாம் :)

சுகா