Wednesday, April 13, 2005

பண்டிகைக்கு காத்திருக்கும் சாமியில்லையா...

"பால் மழைக்கு காத்திருக்கும் பூமியில்லையா...
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமியில்லையா..."

காதுகளில் இனிமையாக ஒலித்தது... சாமி மட்டுமா காத்திருக்கிறது, நானும் கூடத்தான்...

பண்டிகை பரபரப்பை ரசிப்பத்ற்காக மட்டுமல்ல. பல நாளாக விட்டுப் போயிருக்கும் நண்பர்கள் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளவும் தான்.
பண்டிகை அன்று தொடர்பு கொள்வதில் இரண்டு நன்மைகள் உண்டு.
ஒன்று, எடுத்த உடனே திட்டு வாங்க வேண்டியதில்லை. இன்னொன்று,
எந்த விசயத்திலிருந்து ஆரம்பிப்பது என குழம்பத்தேவையில்லை,
வாழ்த்துக்களுடன் தொடங்கலாம்..

இன்று என் புத்தாண்டை, ஒரு நூறு பேருக்கு வாழ்த்துக்களுடன் துவங்கி
உள்ளேன்... நூற்றி ஓருவராக உமக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

~சுகா

Tuesday, April 05, 2005

பாரதி வழியில்...

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி பிறர்
வாடப் பல செயல்கள் செய்து மனம்
வாடித் துன்பமிக உழன்று நரை
கூடிக் கிழப் பருவமெய்திக் கொடுங்
கூற்றுக் கிரையென பின்மாயும் சில
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ !